பூக்களில்
தவழ்ந்திடும்
புன்னகை உலகில்
மிக மிக
அழகு ..
பலவித பணிகளில் ..
கவலையில் ...
எதிர்ப்படும் மனிதர்..
யார் காணும் போதும்
பூக்களாய்ச்
சிரிக்கும்....
நாமும் ...அழகு..
புன்னகை செய்வோம்
பூக்களைப்போல்.
மணியோசை உலகில்
மிக மிக
இனிமை ...
நினைக்கும்
செயல்
எல்லாம்
நிறைவேறும் ..
மணியோசைஒலித்தால்.
விரும்பியது நடக்க..
மனம் பதறித் துடிக்கும்
முகங்களைக் கண்டு ....
வாழ்த்திடும் போது
நம் வார்த்தை இனிமை
மணியோசை போல்...
வாழ்த்துவோம் இனிமையாய்...
மணியோசை போல் .
தெய்வானை,
மீஞ்சூர்.