என்ன கொண்டு வந்தேன் நான்,
எனக்கும் தெரியவில்லை,,,
மனிதனாய்
பிறந்து விட்டு
நான் மயக்கம் கொள்கின்றேன்,,,
தென்னை
மரத்தை நம்பி நிழலில் நான் நின்றேன்,,,
இலவமரத்தைக் கண்டு
பழத்தை பார்க்க வந்தேன்,,,
பாலைவனத்தில் நான் விதையை தூவிவிட்டு,,,
பாவி
உள்ளத்திலே மரம் வளரக் கண்டேன்,,,
வேலை கிடைக்கையிலே
போக மனமில்லையே
வேலை தேடுகிறேன்
நாளும் விடவில்லையே,,,
ஆலமரத்தடியில் நான்
என்னைத் தொலைத்து
விட்டேன்,,,,
வீழும்
விழுதுகளில்
நாளும்
தேடிக் கொண்டிருக்கிறேன்,,,,
என்னை,
நானே
தேடிக் கொண்டிருக்கிறேன்,,,
பாலா