Header Ads Widget

Responsive Advertisement

எதுவென்று விளங்கவில்லை - பாலா



சொந்தம் என்பதும் விளங்கவில்லை,,, அது சொல்லித் தந்ததும் விளங்கவில்லை,,,
பந்தம் என்பதும் விளங்கவில்லை வந்த பாவம் என்பதும் விளங்கவில்லை,,,

நம்பிய நாட்களும் நகர்ந்திட, நகர்ந்திட
நம்பிக்கை என்பதும் விளங்கவில்லை,,,
வெம்பிய மாம்பழம் இனித்திடும் போது பழுத்ததும் அங்கே இனித்திடத்தான் நல்லது, கெட்டது விளங்கவில்லை,,,

இரண்டிலும் சுவையை அறிந்திட்ட நாவும் இறுதியில் சொல்வது எதுவுமில்லை"
உண்ட நாவும் நன்றி கொண்டு
ஒற்றுமையில் வேற்றுமை காண்பதில்லை,,,

கள்ளும், பாலும் கலந்திட்ட போது நிறத்தால் எதுவென விளங்கவில்லை,,,
மனம்,
மறைத்த
கள்ளும்
மறந்தும்,
வாசனை தருவதை நிறுத்தவில்லை,,,

வெள்ளை வண்ணப்பாலும் சேர,
திரிந்திட அங்கு மறக்கவில்லை,,,
தி(ரு)ரிந்திட்ட பாலும் பிரிந்திட நினைக்க தன்னால் பிரிய முடியவில்லை,,,

கள்ளா? பாலா?
நண்பனைக் காண வண்ணத்தில் என்னால்
முடியவில்லை,,,
மணம், கண்டுகொண்ட பின்னாலே வந்தவன் "எதுவென்று விளங்கவில்லை"

பாலா,,,