விதைகளெல்லாம்
கதை சொல்ல
ஆரம்பித்தன
விதைப்பவன் வீட்டில்
வெறும் விளையாட்டு
பொருளாய்
தன்வினை செய்ய
விண்முனை எதிர்ப்பார்க்கும்
விதைகளுக்கு தூவிவிடும் தூறலாவது தூவிவிட்டுபோ
சோர்ந்து கிடக்கும் விதைகளை
கை சேர்த்து அள்ளி
விதைகளுக்கு வாழ்வளிக்கும்
விவசாயிக்காக
கொஞ்சம்
தூறலாவது தூறிவிட்டுபோ..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..