உயிருக்குள்
சிறகு கட்டி
உயரப் பறக்கும்
புயலுக்குள்
தென்றலனுப்பி
தலை வருடும்
புலி பாய்ந்து
வந்தாலும்
பூ கொடுக்கும்
எரிமலைக்கு
நடுவிலும்
குளிர் தரும்
எப்போதும்
வாழ்வுதனை
நெகிழ்வாக்கும்
தரைதனை
சமயத்தில்
வானம் செய்யும்
தலை தன்னில்
இமயத்தின்
பாரம் செய்யும்
நடுநடுவே
நிலவினுக்கு
அழைத்துப் போகும்
நிச்சயமாய்
நட்சத்திரக்
கவிதைப் பூக்கும்
காதலினை
தவிர்த்துவிட்டு
உயிர் வாழ்தல்
உணர்வுதனை
பிரித்து விட்டு
உடல் வாழ்தல்..!
- வெள்ளத்துரை