Header Ads Widget

Responsive Advertisement

தலைமகன்

தங்கைக்கு தகுதியான வாழ்க்கை

அக்காளுக்கு அமைதியான வாழ்க்கை

அப்பா அம்மாவிற்கு

அன்பும் பாசத்தையும்

விட

நிம்மதியான வாழ்க்கை

அமைத்துவிட்டு


தலைமகனாய் பிறந்தவன் எல்லாருடைய வாழ்வையும் அமைத்துக்கொடுத்தும்


 வாழ்பவரின் எண்ணங்களில் வகைதெரியாமல்

வாழ்க்கை 

நடத்தினால்.?


தாய் தந்தைக்கு

தலைமகனாய்

தங்கைக்கு 

அண்ணாய்

அக்காளுக்கு 

தம்பியாய்

இருந்து 

ஏற்றி வைத்த தீபங்கள் அணையாமல்

பாதுகாக்க 

யார் வருவாரென தலைமகன் தவித்து நிற்க..


உறவுகளில் அமைதி நிலவிட

நிலைத்த உறவை 

பலத்த 

பாதுகாப்புடன்

வழிநடத்திட

உறுதியுடன் உறவுகளை கைக்கோத்திட

உறவை வளப்படுத்துவோம்

வாழும் வரை நிம்மதியுடன்

வாழ..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..