Header Ads Widget

Responsive Advertisement

காத்திருப்பு



புத்தகத்தின் தாள்களுக்கிடையே
மயிலிறகை வைத்துவிட்டு
அப்பப்ப
அது குட்டி போட்டடிருக்குமோ என திறந்துதிறந்துப் பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிறுபிள்ளையாய்
என்று என்விழிகளில் நீவிழுந்தாயோ
அன்றிலிருந்து இதோ இன்னும் உன்விழியசைவிலிருந்து
ஒருசிறு சாடைகூட காட்டாமல் இருப்பதனால்
உனக்காக உன்பதிலுக்காக
நீவழக்கமாகச் செல்லும் பாதையிலே தினந்தோறும் வந்துவந்து காத்திருக்கிறேன்!
மயிலிறகாய் என்னை ஏமாற்றிவிடுவாயோ?

த.ஹேமாவதி
கோளூர்