புத்தகத்தின் தாள்களுக்கிடையே
மயிலிறகை வைத்துவிட்டு
அப்பப்ப
அது குட்டி போட்டடிருக்குமோ என திறந்துதிறந்துப் பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிறுபிள்ளையாய்
என்று என்விழிகளில் நீவிழுந்தாயோ
அன்றிலிருந்து இதோ இன்னும் உன்விழியசைவிலிருந்து
ஒருசிறு சாடைகூட காட்டாமல் இருப்பதனால்
உனக்காக உன்பதிலுக்காக
நீவழக்கமாகச் செல்லும் பாதையிலே தினந்தோறும் வந்துவந்து காத்திருக்கிறேன்!
மயிலிறகாய் என்னை ஏமாற்றிவிடுவாயோ?
த.ஹேமாவதி
கோளூர்