கண்ணே மணியே எனக்கொஞ்ச
பெண்ணைப் பெற்றவர் யாராயிருப்பினும்
விண்ணை நோக்கி எளிதில் செல்லலாம்!
பெண்குழந்தை முகமே முழுநிலவு!
வசீகரப் புன்சிரிப்போ நட்சத்திரங்களின் கூட்டம்!
இளந்தேகம்தான்
வெண்முகிற்தொகுதி
குழந்தையின் கடைவாயிலொழுகும்
சுவையூறும் எச்சிலுக்கு ஈடாகுமா வான்சிந்தும் மழை?
பெண்குழந்தைப் பெற்றவர்களே
உங்கள் குழந்தையைக் கொஞ்சும்போதெலாம்
விண்ணிலே இருப்பதாய் உணர்வீர்கள்!
அக்குழந்தை வளர்ந்துப் பெரியவளானதும்
சாதனை புரிந்து உண்மையிலேயே உங்களை விண்ணை நோக்கி அழைத்துச் செல்வாள்!
நேசிப்போம் பெண்குழந்தைகளை!
த.ஹேமாவதி
கோளூர்