Header Ads Widget

Responsive Advertisement

அறியாத வயது -வத்சலா



அற்புதமாய் நாம் நினத்த 

                               பலவும்....

அற்பமாய் எண்ணப்பட்ட

                                   காலம்

கேலிக்கு சொல்லப்பட்ட

கதைகளை விழிவிரித்து

நம்பிய அறியாத வயது😯

பழத்தின் விதைகளை

விழுங்கினால் அது

வயிற்றில் வேர்பிடித்து

வாய்வழியே விருட்சமாய்

வளருமெனும் பயம்தரும்கத

தண்ணீர் குடிக்காதிருந்தால்

மரம்வளராதென நம்பி

மயங்கிவிழுந்த மாயக்கதை!

கட்டெறும்பைவைத்தரைக்க

கருஞ்சிவப்பாய் மருதாணி 

பிடிக்குமெனும் ஆச்சரியக்

                                   கதை!

கட்டெறும்பைதேடும் போது

சிற்றெறும்பால் கடிவாங்கிய

சிறப்புச்சின்னக்கதை!!

பாம்பைக்கொன்றால் அது

பத்துத்தலைமுறையையும்

பழிவாங்குமெனும் திகில்

                                   கதை!

புற்றுக்குப்பாலூற்றிபாம்புட சமாதான ஒப்பந்தம்போட்ட

உண்மைக்கதை!

ஒற்றைப்படையில் அண்டங்

                         காக்கையை

ஒருசேரப்பாராதுவிட்டால்

ஒச்சமாகும் பயணமென்றதம்

கல்லெறறிந்தாவது காகம்

விரட்டிய வீரக்கதை!

மல்லிகைப்பூ வாசத்திற்கு

மோகினிப்பேய்வரும் என்பதற்காய்

துணியில்பொதிந்து பாத்திரத்தை

அதில் கமத்திப்போட்ட கள்ளமற்ற

வெள்ளைமனசுக்கதை!

விளக்குமாறுகொண்டு

வீசியேகூட்டுகையில் சிதறிய..........

குச்சிகள் நம்மைவிட்டு

பிரியும் உறவுகள் எனும்

பாசக்கதையை நம்பி

பக்கத்துவீட்டுக்குச்சிகளை

செருகிவைத்த சின்னக்கதை?

ரயில்பயணங்களில் 

எதிர்செல்லும் மரங்களெல்லாம்

உறவுகைத்தேடியே ஓடுகின்றன

எனும் ஒற்றைக்கதையை நம்பி

கையசைத்து வழியனுப்பிய

உண்மைக்கதை!

உண்மையிலேயே அறியாத

வயதுக்கதைகள் எல்லாமே கதைகள் மட்டுமல்ல....

பெருங்காப்பிங்களே!

🌹🌹வத்சலா🌹🌹