Header Ads Widget

Responsive Advertisement

நீர்க்குமிழி


கண்ட கனவும் முடியவில்லை,,,

விடிந்த பின்னும் தெரியவில்லை,,,

எந்த கனவை நான் சொல்ல,,,

வந்தவை யெல்லாம்

பெருந்தொல்லை,,,


கற்க கசடற கற்று வந்தேன்,,,

சொத்து பத்துக்களை விற்று வந்தேன்,,,

பிச்சை புகினும் கற்கே நன்றே

என்றே நானும் கற்று வந்தேன்,,,

அதிவீரராம பாண்டியன் அன்று சொன்னதை வாழ்வியலாயும் பெற்றும் 

வந்தேன்,,,


கற்றதை 

எல்லாம் 

எழுதி வைத்தேன்

வேலை வாய்ப்பு அலுவலகத்திலே,,,

மற்றதை 

எல்லாம் எழுதிவிட்டான் இறைவன் 

எந்தன் தலையினிலே,,,


கிடைக்கும் வரை காத்திருந்தேன் எல்லோர்க்கும் பொது நூலகத்திலே,,,

பொறுன்மை மாறா விதியெல்லாம் பொங்கி வர உள்ளத்திலே,,,


காத்திருப்பு

போதுமடா என்று சொல்லி நினைக்கையிலே,,,

கடவுள் போல வந்தது தான் உடலுழைப்பு  மனத்தினிலே,,,

 இல்லாததுண்மையிலே உண்மையிலே இருப்பதுவோ

இல்லாமல் போகாது

உலகத்திலே,,,

எடுத்தேன் உடல் உழைப்பை

கைகளிலே,,,

உடைத்தேன்

நீர்க்குமிழி 

போல்

கவலைகளை,,,


பாலா