கோல மயில் தோகையாட
முகில்கள் களைந் தோட
வயலில் கதிர்கள் நடனமாட
இளந் தளிர்கள் ஊஞ்சலாட
இலைகள் கைதட்டி ஆர்ப்பரிக்க
மரங்கள் மகிழ்ந்து ஆட
பறவைகள் பறந்து ஓட
குயிலின் ஓசை கேட்க
விதைகள் இடம் பெயர
நீரோடை நிசப்தமாய் இருக்கும்
வரை காத்திருந்த காற்று
மனிதர்கள் செய்யும் தவற்றால்
மூர்க்க மாகி துள்ளி
எழுந்து புயலாக மாறி
அனைத்தையும் வாரி எடுத்துச்
சென்று கொட்டியது கடலில்
தி.பத்மாசினி