Header Ads Widget

Responsive Advertisement

காத்திருந்த காற்று


கோல மயில் தோகையாட

முகில்கள் களைந் தோட

வயலில் கதிர்கள் நடனமாட

இளந் தளிர்கள் ஊஞ்சலாட

இலைகள் கைதட்டி ஆர்ப்பரிக்க

மரங்கள் மகிழ்ந்து ஆட

பறவைகள் பறந்து ஓட

குயிலின் ஓசை கேட்க

விதைகள் இடம் பெயர

நீரோடை நிசப்தமாய் இருக்கும்

வரை காத்திருந்த காற்று

மனிதர்கள் செய்யும் தவற்றால்

மூர்க்க மாகி துள்ளி

எழுந்து புயலாக மாறி

அனைத்தையும் வாரி எடுத்துச் 

சென்று கொட்டியது கடலில்


தி.பத்மாசினி