Header Ads Widget

Responsive Advertisement

வீரவணக்கம்

அரிது அரிது.  இந்தியக் குடிமகனாய்ப் 

பிறத்தல் அரிது!

அதனினும் அரிது

தேசங் காக்க இராணுவ வீரனாய்

ஆவது அரிது!

அவ்வாறே ஆயினும் உன்னைப் போல்

வீரமரணம் அடைவது எத்துணை அரிது!

மாவீரன் சுப்ரமண்யன் இன்று நம்மிடையே இல்லை!

ஆனால் அவனது

வீரவுடம்பு அழிவின்றி என்றும் நம்மிடையே வரலாறாய் வாழும்!

சாவது திண்ணம் என்பதை அறிந்தும்

இராணுவம் சேர்வதே சீரிய எண்ணம் எனக்கொண்டு

சேர்ந்தாய்!இளம்வயதிலே

மூவண்ணக்கொடியால்

போர்த்தப் பட்டாய்!,

எங்கள் மனங்களைத் துயரத்திலும் விழிகளை கண்ணீரிலும் போர்த்திவிட்டு

பறந்து சென்றுவிட்டாய்!

இராணுவத்தில் உனக்கான இடம் நிரப்பப் படும்!

ஆனால் வீரனே

உன்குடும்பத்தில் உனக்கான இடத்தை வேறுயார் கொண்டு நிரப்ப முடியும்?...........................................................

கலங்கும் விழிகள்!

கனத்த இதயங்கள்!

மௌன கீதங்கள்

வெறுமை நாட்கள்!

வறண்ட எதிர்காலம்!

இவையே இனி

உன் குடும்பத்தில்!ஆனாலும் அத்தனையும் தாண்டி அவர்கள் உயர்ந்துவிட்டார்கள்!

உன்னை தேசங்காக்க தாரைவார்த்துக் கொடுத்ததனால்

மிகமிக உயர்ந்தே போனார்கள்!

மாவீரனே உன்னோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் எனது *வீரவணக்கம்!*

இராணுவ வீரர்களின் வீரத்தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!

இன்றைய காலை வணக்கம் அனைவருக்கும் *வீரவணக்கம்*


*த.ஹேமாவதி*

*கோளூர்*