Header Ads Widget

Responsive Advertisement

தைப் பொங்கலில் தமிழ்ப் பொங்கல்



தைமகளாம் அத்தைமகளே
தமிழினத்தை காக்க

ஒத்தையில் வா மகளே
வித்தைகளை நீ புரிந்து

ஆங்கில மோகமது
ஆண்டியையும் ஆள்கிறது

தமிழமுது பருகாமல்
தரணியில்  தமிழ் குழந்தைகள்

விந்தையான நிலைதான்
சந்தையில் நிற்கிறது

பாரதி கண்ட கனவுதான்
பாதியிலே நிற்கிறது

சாரதியாய் நீ வந்து
தமிழ் பாடி மகிழ்வூட்டு

தை மகளே அத்தை மகளே
தமிழ் பொங்கல் நீ பொங்கு

கவிஞர்.மு.இராஜேஷ்
புதுவை