உழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு
பிழைக்கத் தெரியவில்லை,
பிழைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு
உழைக்கும் வழக்கமில்லை.
பாசம் காட்டும் மனிதர்களுக்கு
வேஷம் புரிவதில்லை,
வேஷம் போடும் மனிதர்களுக்கு
பாசம் பெரிது இல்லை.
கொடுக்க நினைக்கும் மனிதர்
பிறரிடம் எடுக்க நினைப்பதில்லை,
எடுக்க நினைக்கும் மனிதர் பலரும்
கொடுக்க நினைப்பதில்லை.
சொல்லால் அடிக்கும் மனிதர் இடத்தில்
உறவுகள் சேர்வதில்லை,
உறவை வேண்டும் மனிதர் என்றும்
சொல்லால் அடிப்பதில்லை.
கல்லாய்க் காணும் மனிதர் கண்ணில்
கடவுள் தெரிவதில்லை,
கடவுளைக் காணும் மனிதர் கண்ணில்
கல்லே தெரிவதில்லை.
இதைச் சொன்னாலும் புரிவதில்லை.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*