Header Ads Widget

Responsive Advertisement

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்



மார்கழி மாத குளிரினிலே!

வெண்பனி தூவும் இரவினிலே!

கன்னி மரியின் வயிற்றினிலே

பாலன் இயேசு பிறந்தாரே!



இருளை நீக்கும் வெளிச்சம் போல

மக்கள் பாவம் போக்க பிறந்தாரே!

சிலரின் பாவம் சுமக்க வந்தாரே!

பலரின் நோயைத் தீர்க்கவும் எழுந்தாரே!



அன்னை மரியின் செல்ல பிள்ளை

பால்  போல் சிரிக்கும் முல்லை

மனதில் எந்த கபடமும் இல்லை

அவரே மனித மகிழ்ச்சியின் எல்லை



நட்சத்திரமும் சிரித்து மகிழ்ந்து

அவரைக் காண விரும்பி

ஞானிகளுக்கு பாதை காட்டும்

பேரில் பார்க்க வந்ததுவே



எண்ணங்களையும் சிந்தைகளையும் சீர்படுத்தவே

மக்கள் யாவும் ஒன்றுபட்டு

அன்புடன் கூடி வாழ

இயேசு பிரான் பிறந்தாரே



இந்த நாளின் மகிழ்ச்சி போல

எந்த நாளும் அனைவர் வாழ்வும்

சீரும் சிறப்பும் பெற்று திகழ

இயேசு பிறந்த நாளில் 

வேண்டி விரும்பி வாழ்த்துகிறேன்



தி.பத்மாசினி