ஆச்சர்யம்.அதிலுண்டு
இலேசான.இருட்டுடனே
ஈகையென வரூவாயே
உலகம் உனதன்றோ
ஊரெல்லாம். பாராட்டும்
எல்லோரும் ஒன்றெனவே
ஏற்றத்தாழ்வு உனக்கில்லை
ஐயமின்றி வந்திடுவாய்
ஒற்றுமைக்கு நீயே...உதாரணம்.
ஓருயிருமில்லை நீயின்றி
ஔடதமின்றி நாங்கள் வாழ.
அருமருந்தே அருகே வா
அமுதே வா
அழகான மழையே வா.
ப.கோ.செந்தமிழ்.