Header Ads Widget

Responsive Advertisement

நவரசங்கள். - வத்சலா


அவளின் தீண்டும் ஆவலில்
வந்திட்ட போதிலும் தயக்கம்
ஒட்டிக்கொண்டதால் — *வீரம்*
விலகி அவன் நின்றிட -பாவம் அவளின்
விரலிடுக்குகள் *வெறுப்பில்* விலகின!
அவன் சிந்திய புன்சிரிப்பால்
மேனி முழுமையுமே
மயிர்க்கூச்செரிய *நாணம்* மிகவே
மறைத்தாள் முகம் மூடியே!
சென்ற அவன் பாதையின் வெறுமை
நின்று அவள் *அமைதியைக்*
கொன்றுபோட ......
கண்ணீரை இமையே உறிஞ்சிட....
*கையறுநிலை* எய்தினாள் மாது!
கனவில் முன்நுதலில் அவனிட்ட
முத்தத்தின் ஈரத்தை அவள்
உணருமுன்னே இடைபுகுந்த
தென்றல் துடைத்துவிட.....
*சினந்து* அவள்துரத்திட்ட கணம்
விடியலும் வந்திட்டதே!
நிசத்தில் அவன்நேர் நிற்க....
*ஆச்சரிய*த்தில் புருவவில்லிரண்டும்
நடுநெற்றிக்கேற காதலுடன்
நம்பியவன் தோள் சேர்ந்தாள்!
*கனிவு* கொண்டே  அவன்
பார்த்த ஒரே பார்வையில்
*அச்சம்* உடைத்தே துணிந்து
அவன் உயிர் சேர்ந்தாள் *உவப்பு*டனே!
🌹🌹வத்சலா🌹🌹