Header Ads Widget

Responsive Advertisement

எங்கிருந்து வருகிறாய்

நிலவே எங்கிருந்து வருகிறாய்
சுழன்று அடித்த காற்றில்
சிதறியோடிய மேகக்கூட்டம்
மூந்தாநாள் முதல் ஒயாது பாடிய
முகாரிக்கு ஆறுதல் கூறச்
சடுதியாய் சென்றாயோ?
உன்னைக் காணாது என்
இதய வானம் வெளிறியே போனது
மழைத்துளி நிலம் தொடாத
பாலை நிலம் போலவே
எங்கும் வெறுமை ......!
விரும்பத்தகாத அமைதி.......!
உதிரம் குத்தும் வன்குளிர்.........!
உனைத்தேடி தனிமையில் நான்!
பகலும் என்மனக்கண்ணில்
இரக்கமற்ற இரவானது!
தனிமை இனிமையானதுதான்
ஆனால்.................
தனிமையின் மௌனமோ........
மிககொடுமையானதென நீ
அறியாயோ? சொல் நிலவே!
உள்ளங்கை வைரம் கண்ணாடியே
மனிதருக்கு அது தொலைந்திடும்
கணமே உண்மை நிதர்சனமாகுமே!
அதுபோலவேயானது நீயில்லா வானமே
கவிதை எழுதும் எனக்கு
கருப்பொருளே நீதானே?
கண்மறைந்தே போகாதே!
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
🌹🌹வத்சலா🌹🌹