Header Ads Widget

Responsive Advertisement

நேரமிருந்தால் வந்து போ



மகிழ்ச்சியே...
நேரமிருந்தால்
வந்துபோயேன்...!

இங்கு என்னை
கவனிப்பார்
யாருமில்லாமல்...!
கவலைகள் மட்டுமே
நொடிக்கொருதரம் வந்துபோகிறது...!

வருவாயா
மகிழ்ச்சியே...!

உனக்காக
என் வாசல் கதவு
திறந்தே
இருக்கிறது
அனுதினமும்...!

அன்போடு
அழைக்கிறேன்
ஆறுதல்
தர வாயேன்...!

வந்து....
என் கவலைகளை
களவாடிச்
சென்று விடு
மகிழ்ச்சியே...!

நுனிப்புல்
பனித்துளியாய்
கவலைகளின்
பாரம் தாங்காமல்
வளைந்து உன்னில்
சாய்ந்து கொள்ள
ஏங்கி தவிக்கிறேன்
மகிழ்ச்சியே...!

நேரமிருந்தால்
வந்து போயேன்...!

வருவாயா
மகிழ்ச்சியே...!

✍️கவிரசிகை........
         ........சுகந்தீனா