என் சூரியனே...!
உன்னை
அடிக்கடி மேகம்
வந்து மறைத்து
விடுவதுதான்
ஏனோ..!!
நான்..
காணாமல்
தேடுவதை
கண்குளிர
பார்க்கவா...!!
என் மனம்
குழந்தையாய்
தவிப்பதை
மறைந்திருந்து
ரசிக்கவா...!!
மேகமே..
விலகிவிடு
என் சூரியனை
விட்டு...!!
உன்னால் என்
கண்களிலிருந்தல்லவா
மழை பொழிகிறது...!!
காலத்திற்கு கூட
மழைக் காலம்
என்று ஒன்று
உண்டு...!!
ஆனால்...
என் கண்களுக்கோ
நீ என் சூரியனை
மறைக்கும்
போதெல்லாம்
மழைக்காலமே...!!
மேகமே...!!
உன்னால்
ஆங்காங்கே
ஆறுகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது...!!
இதே நிலை
நீடித்தால்
என்னால்
பிரபஞ்சமே
வெள்ளக்காடாகும்
நிலை உருவாகிவிடும்...!!
எச்சரிக்கிறேன்
மேகமே...!!
விலகிவிடு
என் சூரியனை
விட்டு...!!
✍️கவிரசிகை......
......சுகந்தீனா