Header Ads Widget

Responsive Advertisement

என்று மாறும் இந்த நிலைமை



இரயில்களோ ஓடவில்லை பயணிகளும் யாருமில்லை
சுமைதூக்கிப் பிழைப்பதற்கும் வழியேதும் காணவில்லை
மூளைக்குத் தெரிகிறது வயிற்றுக்குத் தெரியவில்லை
ஏனென்று கேட்பதற்கு எவருமே வரவுமில்லை.

இப்படியே பட்டினியாய் எதுவரை வாழ்வதென்று
சோகமாக அமர்ந்திருக்கும் பெரியவரே கலங்காதீர்
சொல்வதற்கு உரிமையுண்டா என்றெனக்குத் தெரியவில்லை
கண்களிலே கண்ணீரைத் தடைபோட முடியவில்லை.

பிள்ளைகள் பெற்றோரைக் கவனிக்கத் தவறிவிட்டால்
என்னாகும் என்னுடைய தேசத்தின் பண்பாடு
இனியாவது மாறட்டும்  பலபேரின் நிலைபாடு
வாழட்டும் முதியவர்கள் தலைநிமிர்ந்து மாண்போடு.

*கிராத்தூரான்*