ஏமாற்றத்தால்
ஏங்கித்
தவிக்கிறேன்...!!
கண்ணீர்
வடிக்கிறேன்...!!
கவலை
கொள்கிறேன்...!!
இதயம்
இரும்பென
கனக்கிறதே...!!
என்று கலங்கும்
இதயங்களே...!!
இனியாவது
மாற்றிக்
கொள்ளுங்கள்
உங்கள்
சிந்தனைகளை...!!
முதலில்
ஏமாற்றம்
தந்தவர்
யார்....!!
நீங்களும்
அன்புகொண்ட
ஒருவர் தானே...!!
ஏனெனில்...
அன்பினால்
ஏமாற்றப்பட்ட
இதயங்களே
உலகில் அதிகம்...!!
ஏமாற்றிவிட்டார்
எனும் நீங்கள்
அவர்கள்மேல்
வைத்த அன்பு
நிஜமென்றால்
அவருக்காய்
விட்டுக்
கொடுங்கள்...!!
அன்பானவர்களின் ஏமாற்றமென்பது...
அவர்களின்
சூழ்நிலையாகக்
கூட இருக்கலாம்
என்று
விட்டுக்கொடுத்து
உங்களின்
உண்மையான
அன்பினால்
ஏமாற்றமின்றி
தொடருங்கள்...!!
ஏமாற்றம்
என்பதே ஏதோ
ஒருவித
எதிர்பார்ப்பில்
வருவது தானே...!!
உங்கள்
எதிர்பார்ப்பை
குறைத்து
உங்களின்
அன்பானவர்களுக்காய்
நீங்கள்
உண்மையாய்
வாழ்ந்து
பாருங்கள்...!!
அப்போது
உணர்வீர்கள்...
இதயம்
இறகை விட
லேசாவதை...!!
✍️கவிரசிகை.....
......சுகந்தீனா