Header Ads Widget

Responsive Advertisement

இயற்கையோடு நீ


வெட்ட வெட்ட துளிர்க்கும்
மரம் போல் துளிர்க்கின்றது
உன்னோடான காதல்.....

பச்சைப் பசேலென்ற
மலைகள் போல் குளிர்கின்றது
உன் நினைவு....

பூந்தோட்டத்தில் வண்ண
மயமாய் விரிந்திருக்கும்
பூக்கள் போன்ற உன்
கண்கள்.......

சிணுங்கி விட்டுச் செல்லும்
தென்றல் போல் உன் 
மூச்சுக் காற்று...

இசைக்கேற்று அசைந்தாடும் 
மரங்கள் போன்ற உன் 
ராஜ நடை.....

காலை நேரச் சூரியனை 
ஞாபகப் படுத்தும் 
உன் அழகிய முகம்...

நட்சத்திரங்கள் உயிர் 
பெற்று வந்ததோ 
பூமியில் என 
அதிசயிக்க வைக்கும் 
உன் புன்னகை....

இறைவன் படைத்த
அனைத்திலும் நிழல்
ஆடுகின்றது உன் 
நினைவுகள்....

பால.ரமேஷ்