Header Ads Widget

Responsive Advertisement

கவிஞர்



எண்ணத்தில் உதித்ததை உள்ளத்தில் வைக்காமல்
வண்ணங்கள் பலசேர்த்து திண்ணமாய் அளிப்பவர்.

அழகான சொல்லெடுத்து சொல்லுக்கு உயிர்கொடுத்து 
பல்நோக்கு சிந்தைகளைப் பகிர்ந்தளித்து மகிழ்பவர்.

அழகினை இரசிக்கவும் இரசித்ததை வியக்கவும்
வியந்ததில் ஒன்றவும் செய்ய வைப்பவர். 

தவறொன்று காண்கையில் தவறென்று அதைத் திடமாய்
தவறாது சொல்கின்ற திறம் படைத்தவர்.

நிகழ்காலம் என்னென்று வருங்காலம் அறிவதற்கு
கலமெடுத்து கவிபடைத்து நிலைத்து நிற்பவர்.

சிலையொன்று கண்டாலும் மலையொன்று கண்டாலும்
விலைபேச நினைப்பவரைத் தோலுரிப்பவர்.

அழகோடு அறிவையும் பரிவோடு தெளிவையும் 
கருவாக அளித்து அதைப் புரியவைப்பவர்.

மகிழவைப்பவர் என்றும் நினைக்க வைப்பவர்.

     *கிராத்தூரான்*
*சுலீ. அனில் குமார்*