Header Ads Widget

Responsive Advertisement

அச்சிரக்காலம் அழகே



புல்லின் நுனிகளில் மின்னும் துளிகள்
கண்ணின் விழிகளில் மின்னும் ஒளிகள் 
கார்த்திகை மார்கழி மாதக் குளிரின் 
அழகினை உணர்த்தும் அச்சிரக் காலம்.

வெண்மை போர்த்திய மண்ணின் அழகு
இலைகளைப் பொதிந்த பனியின் முருகு
பனியில் நனையும் குழந்தையின் மிடுக்கு
குழந்தையைத் துரத்தும் தாயின் துடிப்பு.

வீடுகள் முன்னே விதவிதக் கோலம்
கோலம் போடும் வளையல் கைகள்
காலையில் கேட்கும் இறைநாமங்கள்
பார்த்தும் கேட்டும் இரசிப்பதும் அழகு.

அதிகாலையிலே எழுந்து குளித்து
ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து
முல்லைப் பூச்சரம் நடுவில் சூடி
கோவில் சென்று தொழுவது அழகு.

கார்த்திகை இரவு பஜனை அழகு
மார்கழி வீதி ஊர்வலம் அழகு
அழகோ அழகு அத்தனை அழகு
அச்சிரக் காலம் அழகோ அழகு.

*கிராத்தூரான்*