Header Ads Widget

Responsive Advertisement

அன்னையர் தினம்*


அன்னை என்றால் அன்பு, தியாகம், கருணை இப்படி ஆயிரம் வார்த்தைகளுக்கு வடிவம் தருபவளாக அம்மாக்கள் அனைவருமே இருக்கின்றோம் இரு குழந்தைளுக்கு தாய் என்ற முறையில் என்னையும் சேர்த்து. இதில் தாய்மையில் பிழைகண்ட சில அன்னையரும் உண்டு. அதற்கு அவர்தம் வாரிசே சாட்சி. ஆம் அன்னையர் தம் பிள்ளை வளர்ப்பினை அருமையாய் செய்து விட்டால் அங்கேறாது இங்கே அளப்பரிய குற்றம். சிறைச்சாலைகள் சிறிதாவது இங்கே குறைந்திருக்கும். அன்னையர் தினம் கொண்டாடுவதில் தவறும் இல்லை. அன்னையின் அன்பினை நான் அவமதிக்கவும் இல்லை. உலகில் உள்ளஉயிர்களில் அன்னையர் மட்டுமே அதிக வலி தாங்கி புது உயிர்களை பூமிக்கு கொணர்கின்றனர். அப்படியென்றால் அதன் மதிப்பை உணர்ந்து மாண்புடன் வளர்ப்பது அவள் பொறுப்பல்லவா? அது போகட்டும், அன்னைக்கு மட்டுமே அதிகம் தெரியும் ஓர் உயிரின் மதிப்பு அதை பிரசவிப்பள் அவள் என்பதால், அப்படியிருக்க அடுத்த வீட்டுப் பெண் தன் பிள்ளைக்கு மனைவியாகும் போது எங்கு செல்கின்றது உங்கள் அன்பு? பாசமும் நேசமும் பகிரப்படுவதில்லையே அவர்களிடம்? எங்கே சென்றது தாய்மை? இனியாவது சிந்தித்து திருந்தட்டும் இப்படிப்பட்டவர்கள். தான் பெறதாத குழந்தையை தனதாக பாவித்து அனாதை, ஆதரவற்றோக்கு அன்னையாய் வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாக்களுக்கும் அவர் வழியில் செயலாற்றும் அனைவருக்கும் வாழ்த்து சொல்வோம் நம் அம்மாவுக்கு சொல்வதோடு சேர்த்துஅன்னையர் தின வாழ்த்தினை.
செ. வினிட்டா கரோலின்