கொடுத்தால் தானே எதுவும் நடக்குது,,,
கொடுக்காவிட்டால் பைலும் கிடக்குது,,,
மிடுக்கா இருக்கும் காரியதரிசி
அவன் தான் அதிகாரிக்கு கைராசி,,,
லஞ்சம் வாங்க,,, அண்ணே
லஞ்சம் வாங்க,,,
ஒன்னுந் தெரியா உத்தமன் போல
உலகமறிந்த பித்தனைப் போல
சத்திய கீர்த்தி என்பார் தம்மை,,,
அது, சலனமில்லா நேரத்தில் நம்மை
உருகச் செய்து
உண்மையை உணர்த்தும்
பெருமையை பேசி பிதற்றும்
நம்மை
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,
எனக்கும் மேலே ஒருவன் என்பார்
தனக்கு எதுவும் இல்லை என்பார்,,,
உனக்கு மட்டும் சகாயம் என்று
சகாயம் வெறுப்பதை
விரும்பிடுவார்,,,
உள்ளதை சொல்லி உள்ளதை செய்ய
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,,
வாங்குற சம்பளம் தெரியாது,,,
இது வாடிக்கையாச்சு இனி மறக்காது,,,
வேடிக்கையாக விலக நினைக்க
என்னை,
விடுவதில்லை எனக்கும் பெரியாளு,,,,
லஞ்சம் வாங்க
அண்ணே
லஞ்சம் வாங்க,,,
பாலா,,,