Header Ads Widget

Responsive Advertisement

தாய்மொழியும் தந்தைசொல்லும்



பாலூட்டும்போதிலே
தாய்சொல்லும் மொழி தாய்மொழி!
நாவென்ற மனையில் முதலில்குடியேறுவது
தாய்மொழி!
ஆணிவேராக இருந்து சிந்தனையைக் கிளைத்தமரமாக்குவது
தாய்மொழி!
வேற்றுமொழிப் புலமையைப் பெறுவதற்கும் பாலமாக இருப்பது தாய்மொழி!
அந்நியர் தேசத்தில் எதிர்பாராவிதமாய் நம்செவியில் கேட்கையில் பேரின்பம் தருவது தாய்மொழி!
ஈன்றவளுக்கு இணையில்லை!
ஆனால் ஈன்றவள் மட்டுமே தாயல்ல!
தாயால் நாம்பேசும் தாய்மொழியும் நமக்கொரு தாயே!
தாய்ப்பாலோடு தாய்மொழியறிந்தோம்!
தாய்மொழியைத் தந்தை சொல்லிட மறையென உணர்ந்தோம்!
தாய்மொழியிற் சிறந்தமொழி வேறேது?
தந்தைசொல்லினும்
உயர்மறையேது?
தாய்மொழியைத் தாயெனக் கொண்டாடிப் போற்றுவோம்!
தந்தை சொல்லை மீறாது அடிபணிந்து நடப்போம்!

த.ஹேமாவதி
கோளூர்