Header Ads Widget

Responsive Advertisement

அமைதி



இல்லாத ஒன்றை இருப்பது போல தினமும் நானும் தேடுகிறேன்.
அந்நாளு முதலும் இந்நாளுவரைக்கும்
அது
என்னானு நானும் தேடுகிறேன், அமைதியை என்னானு நானும் தேடுகிறேன்,,,

கண்டவர் இங்கே யாருமில்லை,
கண்ணனும் கீதையில் கூறவில்லை,
ஜனனம் முதலே மரணம் வரையில்
அமைதியை காண முடியவில்லை,,,,

அமைதியாக இருப்பதற்கே
அத்தனை பொருளையும்
வாங்கி வச்சான்,,,
மனிதன்,
அத்தனை பொருளையும்
வாங்கி வச்சான்,
அதை ,
தன் வசப்படுத்தும் முயற்சியில் வந்த தடங்கலினாலே ஏங்கி விட்டான்,,,,
மனிதன்,
தடங்தலினாலே ஏங்கி விட்டான்,,,,

நிலையில்லாத நினைப்புகளாலே
நிலைக்கு மென்றே நினைத்திருந்தார்,,,
பலர்,
நினைவுகளே கனவாய் மாற கவலையை மட்டும் ஏற்றுக் கொண்டார்,,,
பலர்,
கவலையை மட்டும்
ஏற்றுக் கொண்டார்,,,

என் வசம் இருப்பது போதுமென்று இருந்தவர் தானே வாழ்ந்து விட்டார்,,,
பலர்,
தன்னை மறந்து
தரமுமிழந்து பொருள்தனைத் தேடி
அமைதி காண அலைகின்றார்,,,
பலர்,
அமைதி காண அலைகின்றார்,,,!

அமைதி என்பது இயற்கைக்கே,,,
அண்மையில்
கண்டேன் உண்மையிலே,,, ஞானமும் கர்மமும் உள்ளவரை
நயம்பட தந்தது நல்லவரை,,,
நல்லவரெல்லாம் இயற்கையிலே இணையக் கண்டேன் அமைதியிலே,,,!

பாலா,,,