ஏர்முனையால்
வயல்களிலே
நெல்லோவியம்
தீட்டும் உழவர்கள்
நிறைந்த தஞ்சையில்
எழுதுகோல் முனையால்
பனையோலைகளிலே
சொல்லோவியம்
தீட்டிய புலவர்கள் மத்தியிலே
உளிமுனையால்
பாறாங்கல்லிலே
கல்லோவியம் தீட்டியவன் இராஜராஜசோழன்!
காலங்கள் கடந்தாலும்
கம்பீரம் கடக்காமல்
இன்னும் நிமிர்ந்தே
நிற்கிறது!
தஞ்சை பெரியகோவில்
த.ஹேமாவதி
கோளூர்