Header Ads Widget

Responsive Advertisement

என் பாதை



ஆயிரம் பாதையிலே என் பாதையை யாரறிவார்,,, 

நான் போகின்ற பாதையிலே 

பல மூடல்கள் காண்கின்றேன்,,,,


பல தேடல்கள் இருந்து விட 

அந்த தேடலும் 

நினை

வில்லையே,,,,

கோடியில் நானொருவன் 

என் 

கோலத்தை யாரறிவா?


ஆற்றுக்கும் பாதையுண்டு, அனல், 

காற்றுக்கும் பாதையுண்டு, நேற்றுக்கும் பாதையுண்டு,,, இன்றுக்கும் பாதையுண்டு நாளைக்கு யாரறிவார் நானதை தேடுகிறேன்,,,,


ராமன், 

காட்டுக்கு பாதை கண்டா 

காலத்தை 

கழித்து வந்தான்,,,,

மனம் , போன போக்கினிலே

சூர்ப்பணகை 

கிளி போல வழியில் வந்தாள்,,,,


ராத்திரி போவதெல்லாம் யார் போட்ட பாதையிலே,,,

என் பாதை எதுவென்று நான் காண முடியலையே,,,

வெளிச்சமும் 

வந்து விட 

நானதை பார்க்கவில்லை,,,

விடிந்ததும் தெரிந்திடத்தான் கண்களை மூடவில்லை,,,,,


அந்த 

பாதையில் மேடு பள்ளம் கண்டு, பதைக்குது 

எந்தன் 

உள்ளம்,,, புறப்படும் வேலையிலே

போகுது 

நதியில் 

வெள்ளம்,,,,


என் பாதையில் ஆற்று வெள்ளம் எந்நாளும்

ஒடி வரும்,,,

திருப்பிப் பார்க்கையிலே புதுப்பாதை 

தேடி வரும்,,,,

என்னை

புதுப்பாதை தேடி வரும்,,,,

அது "என் பாதை" என பெயர் 

பெரும்,,,,


பாலா