நிலவில் நடைபயில
நித்திரை போதும் ;
சந்த
நயமிக்க தமிழால்
சித்திரமும் கவிதை ஓதும்;
சிந்தித்தால் வானவில்லும்
கூந்தலைக்கோதும்;
சாத்திரத்தையும் சூத்திரத்தையும்
கூறி தடைசெய்ய நினைத்தால்
தமிழுக்காக அகிலமே
படைதிரண்டு மோதும்;
இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென
உயிரில் கலந்த தமிழுணர்வே
உருக்குலையாத தித்திக்கும் பேச்சென
வானவீதியில் நடைபயில
வண்ணத்தமிழே
அக்னி வீச்சென
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.