Header Ads Widget

Responsive Advertisement

புதிய பாதை



ஆயிரம் பாதைகள் இருந்தாலும் அவனது பாதை என் பாதை,,,

சாத்திரம் ஆயிரம் சொல்லட்டுமே சரித்திரம் பலவும் கூறட்டுமே

விதியில் வந்ததில் என் பயணம்

பொது மதியில் மாற்றவும் முடியாது,,,


காரணம் பலவும் அதற்குண்டு,,,

கர்ம யோகமே துணை நின்று நடத்துவது தான் விதி என்று போகுது பாரு தினம் கண்டு,,,


"புதிய பாதை"

என்பதெல்லாம் பிறக்கும் போதே தெரிந்துவிடும்.ஞான வழியும் அவர்க்குண்டு

நல்லது நடக்கும் தினம் என்று ,,, வாயில் வருவது தான் நல் பாதை, அதுவே என்றும் "புதிய பாதை,,,,"


கர்ம வினையில் நானிருக்க

"புதிய பாதை" தொடுவதற்கு

சுயநலமின்றி ஆற்றிடனும் 

கர்ம யோக பலனாலே,,,

கிடைப்பது எல்லாம் சுகம் தானே

ஞான வழி 

அது தானே

அதுவே, 

எந்தன் 

"புதிய பாதை,,, "


பொதுநலம் மனம் வைத்து செய்கின்ற செயலெல்லாம் நிதம் முனிவர் செய்கின்ற வேள்விக்கு ஒப்பாகும்,,,

கர்ம வழி ஞான வழி இரண்டும் முரணல்ல,,,

நிர்மலமாய் மணமிருந்தால் நீயும் நானும் உணர்ந்திடலாம்,,,


எந்த வழி ஆனாலென்ன

எதுவந்து போனாலென்ன

வந்த வழி சொந்த வழி

வாழ்வும் அதிலே செல்லும் வழி!

"புதிய பாதை"

என்றாகி

சிறந்த வழியும்

உண்டாகி நல்ல வழியில் நம் பயணம் தொடர என்றும் 

"புதிய பாதை"


பாலா