Header Ads Widget

Responsive Advertisement

துப்புக்கேடு



சமுத்திரம் அடக்கியாண்டு

கங்கையைக் கொண்டுவந்து

சரித்திரம் படைத்தவர் சரித்திரம் தெரிய வில்லை.


இமயத்தில் கல்லெடுத்து

இங்கு வந்து கோவில் கட்டி

திறமையைக் காட்டியவர் 

வரலாறு தெரிய வில்லை.


கல்லில்லா ஊரிலே கற்கோவில் கட்டி

சொல்லில்லா வியப்பினை

உலகுக்குக் காட்டியோன்

கல்லறை எங்கென்று தெரிய விழைய வில்லை.


அங்கே அது உண்டு

அதில் இந்தச் சிறப்புண்டு 

என்றெல்லாம் கதைவிடுவார்

நம் சிறப்பை மறந்திடுவார்


முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பதும்

வெளிநாட்டு மோகத்தில் 

தாய்நாட்டை மறப்பதும்

நம்மவரின் சாதனையை பறைசாற்ற மறுப்பதும்

துப்புக்கேடன்றி வேறென்ன சொல்வீர்.

  

*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*