Header Ads Widget

Responsive Advertisement

எதிர்பார்ப்பு

மரமே நீ மனிதனிடம் மன்றாடாதே

மழையிடம்

கேள்

மழை உன்னிடம்

பேசும்

உங்களின் இருவரின்

உறவுதான்

உலகில் பிறக்கும் 

உயிர்கள்

அவர்களே

மனிதர்கள்..


மனிதர்கள் தன்னை காக்க பிறந்தவர்கள் சுயநலம் மிக்கவர்கள்

மழையும் மரமும்

மண்ணை காக்க பிறந்தது

பொதுநலம் 

நிறைந்தது.


யாரிடமும் எதையும்

எதிர்ப்பார்க்காதவர்கள்

இவ்வுலகின்

உண்மையானவர்கள்

அவை

மழையும் மரமும்

மட்டுமே..


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..