மரமே நீ மனிதனிடம் மன்றாடாதே
மழையிடம்
கேள்
மழை உன்னிடம்
பேசும்
உங்களின் இருவரின்
உறவுதான்
உலகில் பிறக்கும்
உயிர்கள்
அவர்களே
மனிதர்கள்..
மனிதர்கள் தன்னை காக்க பிறந்தவர்கள் சுயநலம் மிக்கவர்கள்
மழையும் மரமும்
மண்ணை காக்க பிறந்தது
பொதுநலம்
நிறைந்தது.
யாரிடமும் எதையும்
எதிர்ப்பார்க்காதவர்கள்
இவ்வுலகின்
உண்மையானவர்கள்
அவை
மழையும் மரமும்
மட்டுமே..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..