Header Ads Widget

Responsive Advertisement

களிப்புடன் வாழ..

வெறுப்புகளைத்தாண்டி வீணையை வாசிக்க கற்றுக்கொண்டேன்

விருப்பமுடன் இசையாய் மனது இயல்பானது.


காயம்பட்ட யாக்கைக்குள் கற்பனைக்கு எட்டா கவலைகள்

கடவுளாய் வந்தவர்கள் கவலைகளைக்

கலைந்துசென்றார்கள்.


சலிப்புடன் வாழாத வாழ்க்கை உன்னை சரியான வாழ்க்கைக்கு முன்னெடுத்துச் செல்லும்.


விளிப்புடன் இருப்பாய் காலமுள்ள போதே

களிப்புடன் வாழ்வாய் கவலையில்லாமல்.


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.