Header Ads Widget

Responsive Advertisement

கோடைமழை மழைத் தாயின்குமுறல்l

                                               
நீரிடம் சொன்னேன்
தீயிடம் சொன்னேன்
ஊரிடம் சொன்னேன்
உறவிடம் சொன்னேன் பாரிடம் சொன்னேன்
சேரிடமறியா சேர்ந்திருத்தல் எத்தனை
வேர் தடமழிக்கும் என்பதை
வரியாய் சொன்னாலும்
வேறிடம் போகும் கானாங்
குருவிகள் போல் தவிக்கும்
                                 காலம்
வரும்முன்னர் மரம் வளர்த்து
வளம் கொழிக்கும் உபாயந்
                               தன்னை
செவிபெற்றும் செவிடராய்ப்
                       போய் நிற்கும்
சிதிலமனம்கொண்டு ந(ட)டி
                         -ப்பார் முன்பு சேற்றிற்கரைத்த சந்தனமாய்
கவிழ்த்துப்போட்டு
கவி வழியே *கோடைமழை*
வரம்வேண்டி; வரவும்வேண்டி
காத்துக்கிடக்கும் மாந்தரே
*செய்வனத்திருந்தச்செய்* —திருந்தாலே நான்உமக்கு
*பருவத்தே பயிர் வளர்* க்க
உயிர் நீரை மும்மாரி
பொழிந்து இருப்பேனே!
நிழல் நீக்கி நிஜம்தேடும்
மானிடராய் நீர் மாற இன்னமும் தாமதமேன்?

வத்சலா