Header Ads Widget

Responsive Advertisement

பொடிக்கவிதைகள்

*தஞ்சை பெரியகோவில்*

ஏர்முனையால்
வயல்களிலே
நெல்லோவியம்
தீட்டும் உழவர்கள்
நிறைந்த தஞ்சையில்
எழுதுகோல் முனையால்
பனையோலைகளிலே
சொல்லோவியம்தீட்டிய புலவர்கள் மத்தியிலே
உளிமுனையால்
பாறாங்கல்லிலே
கல்லோவியம் தீட்டியவன் இராஜராஜசோழன்!
காலங்கள் கடந்தாலும்
கம்பீரம் கடக்காமல்
இன்னும் நிமிர்ந்தே
நிற்கிறது!
தஞ்சை பெரியகோவில்


*படைப்பின் இரகசியம்

ஆண்சாதி ஒன்று
பெண்சாதி இரண்டு
இந்தவழக்கோடு
மூன்றாம் சாதியும்
ஒன்றுண்டு இது
ஆதியிலிருந்தே
வருகின்ற கணக்கு!
நாளமில்லா சுரப்பிகள் செய்கின்ற பிணக்கு!
ஆனணப் பெண்ணாக
பெண்ணை ஆணாக மாற்றுகின்ற சுணக்கு!
பதின்மத்தின் தொடக்கத்தில் தடுமாறும் ஹார்மோன்!அதனாலே மனம்
நிலைமாறும்
புதியகோணம்!
புரியாத பெற்றோர்கள்!
பரிகசிக்கும்
சுற்றங்கள்!
கேலிஆடும்
நட்புக்கூட்டங்கள்!
உடலாலும் பாதிப்பு!
மனதாலும் பாதிப்பு!
இவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே அன்றி தூற்றப்பட
வேண்டியவர்கள் அல்ல!




எதிரும் புதிரும்

என்னைக் காணும்போதெல்லாம்
வாய்மலர்ந்து ஒற்றைச் சொல்கூடப் பேசமாட்டாய்! என்னிடம் பேசும்போதுமட்டும்
மொழியிலே கருமியாய் இருக்கிறாயே என வருத்தப்பட்டாலும்
விழியாலே ஓராயிரம் சொல்பேசி அசத்திவிடுகிறாய்!
விழியால்
பேசும்போதில் அந்த ஏழு வள்ளலையும் மிஞ்சி விடுகிறாய்!

த.ஹே