Header Ads Widget

Responsive Advertisement

சென்றது எங்கே?



அன்றெல்லாம்
பள்ளியிலே ஏழாம்வகுப்பு வரை
பாவாடை சட்டை!
எட்டாம் வகுப்பு
வந்தாலோ
கண்கவரும் சீருடை
பாவாடை தாவணியாய் மாறும்!
சிறுமிகளுக்கோ
தாவணிக்கு மாறியதில் நாணமும் கர்வமும் ஓங்கும்!
இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டி தொடுத்த மலர்ச்சரம் பட்டையாய் வைத்து
தாவணி முந்தானையைப் பட்டையாய் இழுத்து
முன்பக்கம் சொருகி
நடக்கும் அழகே தனிஅழகு!
இப்போது இருக்கிறதா அந்த தனிஅழகு?
நம்உணர்வோடு கலந்தது மொழிமட்டுமல்ல!
உடையும் தான்!
தமிழர்களின்
புடவை உலகமே
வியக்கும் காவியமல்லவோ?
அதில் தாவணி என்பது கவிதையன்றோ?
மெல்லமெல்ல
தாவணியின் இடத்தை இன்று சுடிதாரும் துப்பட்டாவும் பிடித்துக்கொண்டது
யாராலே?எதனாலே?
மனம் குமைகிறது!
தாவணி அணிந்ததுமே சிறுமிகளிடையே வரும் வெட்கம் அழகு!
தான் பெரியவளாகிவிட்டோம் என்றநினைப்பினில் வரும் கர்வம் அழகு!
இனி பக்குவமாய்
பண்பாடாய் நடக்கவேண்டும் என்ற சிந்தனையால் முகத்தில் வெளிப்படும் பெருமிதம் அழகு!
இவ்வாறே கல்யாணவீடுகளில்
வண்ணவண்ண தாவணிகளில் ஆளான பெண்கள் உலாவருவது அழகு!
பெற்றோரும் மற்றோரும் சொல்லித்தரும் முன்னரே
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணத்தோடு
சிறுமிகளுக்கு பண்பாட்டைச் சொல்லுவதில் முந்திக்கொள்கிறது
பாவாடை தாவணி!
ஆயிரம்தான் சொல்லுங்கள் இந்த சுடிதாரும் துப்பட்டாவும் நம்ம பாவாடை தாவணி போலாகுமா?

த.ஹேமாவதி
கோளூர்