அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் தரும யோகத்தில
நிலைத்திடல் என்றிவை நல்குவாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தும்
குலவிடு தனிபரம் பொருளே!
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்!!
மகாகவி பாரதி.
இனிய நற்காலை வணக்கம் !