Header Ads Widget

Responsive Advertisement

மகாகவி பாரதி கவிதை

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் தரும யோகத்தில
நிலைத்திடல் என்றிவை நல்குவாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தும்
குலவிடு தனிபரம் பொருளே!

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்!!

மகாகவி பாரதி.

இனிய நற்காலை வணக்கம் !