ஒருவேளை
நீ
போரிட்டிருந்தால்
துப்பாக்கி குண்டுகளுக்குள்
உன்
மூச்சினை
மாலையாய்
சூட்டியிருப்பாய்....
ஆனால்
இன்றோ....
நாறுநாறாய்
தசைகள் சிதறுண்டு...
இரத்தங்களால்
பூமித்தாயின் மடியில்
கோலமிட்ட வீரனே..!
உன்
உதிரத்தில்
எங்கள் வாழ்க்கை ;
ஏ!இளைஞனே!
எப்படி ஆறுதல் சொல்ல
மனைவிக்கும் பிள்ளைக்கும்
பெற்றோர் உற்றோர்க்கும்;
உடலால் அழிந்தும்
உயிரில் கலந்த வீரனே!
உன்
உடல் எங்கே?
இறந்தால்
புதைக்கவோ
எரிக்கவோ
தானே செய்வோம்
எம் மரபில்;
நாற்பது நாயகர்களின்
உருவத்தை
எந்தெந்த உருவத்தில் பொருத்திப் பார்த்து கண்டறிய...;
அடையாளம் தெரியாமல்
உருக்குலைந்தாய்....
ஆனாலும்
வடுவாய் எங்கள் மனதில்
அடையாளமானாய்....
கண்ணீருடன்........
கரிசல் தங்கம்