Header Ads Widget

Responsive Advertisement

அடையாளம்

ருவேளை

நீ

போரிட்டிருந்தால்

துப்பாக்கி குண்டுகளுக்குள்

உன்

மூச்சினை

மாலையாய்

சூட்டியிருப்பாய்....

ஆனால்

இன்றோ....

நாறுநாறாய் 

தசைகள் சிதறுண்டு...

இரத்தங்களால் 

பூமித்தாயின் மடியில்

கோலமிட்ட வீரனே..!

உன்

உதிரத்தில்

எங்கள் வாழ்க்கை ;

ஏ!இளைஞனே!

எப்படி ஆறுதல் சொல்ல

மனைவிக்கும் பிள்ளைக்கும்

பெற்றோர் உற்றோர்க்கும்;

உடலால் அழிந்தும்

உயிரில் கலந்த வீரனே!

உன்

உடல் எங்கே?

இறந்தால்

புதைக்கவோ

எரிக்கவோ

தானே செய்வோம்

எம் மரபில்;

நாற்பது நாயகர்களின்

உருவத்தை

எந்தெந்த உருவத்தில் பொருத்திப் பார்த்து கண்டறிய...;


அடையாளம் தெரியாமல்

உருக்குலைந்தாய்....


ஆனாலும்

வடுவாய் எங்கள் மனதில்

அடையாளமானாய்....


கண்ணீருடன்........

கரிசல் தங்கம்