கண்ணீர் உறைந்ததோ ?
அன்றி என்......
கண்ணீர்சுரப்பி கூட
காலாவதியாகிவிட்டதோ?!?
இதயமும் எனக்கு
இறந்தகாலமாகியதோ
காட்சியாய் நான் கண்டதும்
காட்சிப்பிழையாய்ப்
போகாதோ?
மழைநீர் சேர்வதால் நீர்க்
குளங்கள்
கண்டே பழகியகண்களின்று
குருதிக்குளம் கொப்பளிக்க
அஃதோர்
காட்சிப்பிழையாய் இருந்து
இருக்கக்கூடாதாவென ஆன்மா கெஞ்சியது
ஆண்டவனுக்கும் கேட்கவி
வில்லை
எனினும் ஆண்டவன்
கேட்டான்
பார் என் மகளே வடிந்த
இரத்தத்தைக்குறித்த
உன்கருத்தைச்சொல்லென்
றான்
உயிர்துடிக்கப்பார்த்தேன்
ஜாதிகளின் ஜதியில்லை
மதங்களின் மவுசு இல்லை
ஏழைப்பணக்காரன் எனும்
எக்களிப்புமில்லை
கருப்பு வெள்ளைதோலின்
கருநாகத்தீண்டல்களில்லை
சத்தமின்றி இரத்தம் சொன்ன சத்தியம்
“நாடுகாக்கும் வீரர் நாங்கள்
கைகொடுக்க தயாரா
நீங்கள்”!
😢வத்சலா😢