Header Ads Widget

Responsive Advertisement

வீடு _ பத்மாசினி


கல்லாலும் மண்ணாலும்

கட்டியது வீடாகாது

அது குட்டிச் சுவர்

நான்கு சுவர்களுக்குள் அன்பான ஒரு கூடு

அதைக் காப்பதோ தந்தையின் பாடு


அன்பு என்ற கல்லை அடுக்கி

நேசம் என்ற கலவை சேர்த்து

பாசம் என்ற நீரை ஊற்றி

கட்டும் வீடே சிறந்த வீடாகும்


வீட்டிற்கு வெள்ளையடித்தால் போதாது

மனதில் இருக்கும் தீய எண்ணங்களை விரட்டியடித்து

வந்தாரை இன்முகத்துடன் வரவேற்று

உபசரித்து ஊணும் அளித்து

தங்க இடமும் தந்து

காக்கும் நல்ல மனையாள் உள்ள வீடே 

சிறந்த வீடாகும்


தி.பத்மாசினி