Header Ads Widget

Responsive Advertisement

வீடு - ஹேமாவதி

ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக

உயிரினங்கள் நாடுவது வீடு!

ஓரறிவு தாவரங்களுக்கு

மண்ணே வீடு!

ஈரறிவு மீனினங்களுக்கு

நீரே வீடு!

மூவறிவு ஊர்வனவற்றுக்கு

மண்புற்றே வீடு!

நாலறிவு பறவைக்கு அவைகட்டும் கூடே வீடு!

ஐந்தறிவு விலங்குகட்கு காடுதான் பெரும்வீடு!

ஆறறிவு மனிதனுக்கு கல்லாலும் மண்ணாலும் விதவிதமாய் வீடு!

ஆனாலும் எவ்விதமாய் இருந்தாலும் வீடென்பது வீடாக இருக்கவேண்டுமெனில்

அங்குள்ளோர் மனங்களில் அன்பு தழைத்திருக்க வேண்டும்!


த.ஹேமாவதி

கோளூர்