ஒன்றும் அறியாத உள்ளம்,,,
உலகம் தெரியாத உள்ளம்,,,
நினைக்கத் தெரியாத உள்ளம்,,
நினைவில் கொள்ளாத உள்ளம்,,,,
பழகிய போது கறுப்புகள் இருக்கும்,,,
அதன்
புழக்கத்தில் கூட கறுப்புகள் இருக்கும்,
விலக்கத்தில் ஒருவன் கறுப்பறிந்தால்,,, அதன்
விளக்கம் கண்டு சுகம் பெறுவான்,,,,
உவமைக்கு வெண்மை முதன்மை என்பார்,,
பால் வண்ணம் பெற்றது இதனாலோ,,,
ஏழு நிறம் கலக்க வெண்மை என்பார்,,,
ஏற்றமும்
பெற்றது அதனாலோ,,,
கண்ணொளி மறைய, பேச்சொலி
குறைய
காரியம் முடியும் வேலையிலே,,,
மனிதன்,
ஓடியாடி ஒன்றுமில்லை
என்றே நினைக்கும் வேளையிலே,,,,
ஏதுமில்லா
வாழ்வு என
ஞானம் வரும்
போதினிலே,,
நாடகம் முடித்து,
நரை நிறம் கொடுத்து,
இறைவன்
முதியவன்
இவனென காட்டிடுவான்,
பூமியிலே!
சுப்பு