நீ
நான் யார்
என்பதையே
மறக்கச் செய்தவள்!
நான்
உன்னையே
சுற்றிவர நினைப்பவன்
காதல்
நம்மை வீழ்த்திய
போர்க்களம்!
உன் விழிவாளிடம்
நான் தோற்பதும்
என்னை உன்
காலின்பெருவிரலால்
மணலில் காவியமெழுதி வெல்வதும்
நம் காதலில் இருவருமே தோற்பதில் வெற்றி
காண்பதில் மகிழ்வெய்துவோம்!
த.ஹேமாவதி
கோளூர்