நீ நீயாக நின்று
நான் நானாக நின்று
உன் கண்ணில் நான் எனைப் பார்த்து
என் மனதில் நீ உனை உணர்ந்து
காதல் அதை நாமாக மாற்றி
நீ நானாக மாறி
நான் நீயாக அன்று
நின்றதை நினைக்கின்றேன் இன்று.
நீ நீங்களாக அங்கே
நான் நாங்களாக இங்கே
சில நினைவு நீங்கலாக இன்றும்
பல நினைவு மங்கலாக என்றும்
நம் காதல் மட்டும் உயிரோடு எங்கும்
நினைவலையின் அதிர்வலையாய் இன்றும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*