அகிலத்தின் மீது ஆண்டவன் கொண்ட காதலின் வெளிப்பாடே இயற்கை வளம் நிறைந்த இப்பூமி. அன்னையும் தந்தையும் கொண்ட காதலால்
அவனியில் நாம் அவதரித்தோம். பிறந்த நாள்முதல் இதுவரை நாமும் பலவற்றின் மீது காதல் கொண்டுள்ளோம். அன்னை தந்தை மீது, உடன் பிறந்தோர் மீது, நண்பர்கள், நலம் விரும்பிகள், உறவுகள், சுற்றத்தார் என ஓயாமல் நாம் அனைவரிடமும் காதல் கொள்வது வாடிக்கையானது. மனிதரிடம் மட்டுமல்ல பார்க்கும் விலங்குகள், பாடிடும் பறவைகள், வாசனை வீசிடும் மலர்கள். பறந்திடும் பூச்சிகள் படித்திடும் கவிதைகள் ரசித்திடும் ஓவியங்கள்,ஒளிர்ந்திடும் சூரியன், நகர்ந்திடும் மேகங்கள், குளிர்ந்திடும் நிலவு, பொழிந்திடும் மழை என ஆனைத்தையும் காதல் செய்வது மானிட இயல்பு. ஆண்டவன் மீது நாம் வைக்கும் பக்தியும் கூட காதலின் வடிவம்தான். இதில் தன் இணையைத் துணையை அதிகமாய் காதல் செய்கின்றோம்
கனிந்துருகுகின்றோம். காதலுணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதுவே வாழ்வில் தலையானது. காதலுணர்வினால் மட்டுமே இப்பூமி கவின் பெறுகிறது. ஆதலால் காதல் செய்வோம் வாழும் நாள்களை காவிய
மாக்குவோம்.
செ. வினிட்டா கரோலின்