புன்னகைக்கும் பொன்னகைக்கும்
ஓரெழுத்தே வித்தியாசம்
அது தரும் ஆனந்தமோ ஆகாசம்
புன்னகையை
அடகு வைக்கவும் மமுடியாது
அடக்கி வைக்கவும் முடியாது
தன்னை உடையவரையும் எதிரில் இருப்போரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
கொள்ளையர்கள் திருட வந்தாலும்
தன்னை ஒளித்துக் கொண்டு
மீண்டும் வெளியே வரும்
முகம் என்னும் தேசத்தில்
நாம் புன்னகை என்னும்
வீட்டில் குடி இருந்தால்
பலரும் நம்மை நாடிடுவார்
புன்னகை என்றும் மலிவானது
மலிவாய் இருப்பதால் கிடைப்பது சுலபமல்ல
அதன் விலையோ சிறு அன்பு
புன்னகை
எதிரியை அடக்கிவிடும்
பகைவனை காட்டிக் கொடுத்துவிடும்
பொல்லாங்கனை துரத்திவிடும்
மொட்டுக்கள் மலர மறந்தாலும்
மலர்கள் வாசம் வீச மறந்தாலும்
நாம் புன்னகை செய்ய மறக்காதிருப்போம்
தி.பத்மாசினி