நேருக்கு நேர் நின்று போர்செய்யத் திராணியற்று,
கூலிகளை முட்டாள்களைப் பகடையாக மாற்றிவிட்டு,
கோழையாய், பேடியாய் சதிச்செயலில் ஈடுபட்டு,
தரம்கெட்டு நிற்கின்ற எதிரி நாட்டின் அடிமையே,
அடில் அகமது என்ற பேர் கொண்ட கோழையே,
எம் வீரர்களை மறைந்திருந்து கொலைசெய்த பதரே,
உன்முகத்தில் எறிகின்றேன் ஒரு பிடிச் சோறு.
உன் தாய் உனக்கு ஊட்டாத தன்மானச் சோறு,
தெருநாய் போன்ற நீ இன்னும் உண்ணாத சோறு,
வீரம் விளைந்த தமிழ்மண்ணில் விளைத்தெடுத்த சோறு,
உன்முகத்தில் காறியே உமிழ்ந்துவிட்டவாறு
எம்தேசம் உனக்களிக்கும் வாய்க்கரிசிச்சோறு,
கோழையென்று உனைச்சொல்லும் ஒருபிடிச் சோறு,
உன் முகத்தில் எறிகின்றேன்
ஒரு பிடிச் சோறு.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*
(44 CRPF வீரர்களைக் கொன்ற அடில் அகமது என்ற கோழைக்குக் கண்டனம்)